top of page
Search

செங்கோன்மை -- blood cross rule

  • Writer: j rajamohan
    j rajamohan
  • Sep 5, 2023
  • 2 min read

Updated: Dec 31, 2023

செங்கோன்மை -- blood cross rule

செங் என்ற வார்த்தை உள்ள வார்த்தைகள் --- திருச்செங்கோடு, செங்கலம் உடையார், செங்குளம், செங்குளத்து ஸ்ரீ மாடசாமி, செங்கழுநீர், செங்குன்றூர், செங்குந்தர், செங்கோட்டை, செங்கோல் இந்த வார்த்தைகள் அனைத்தும் தெய்வத்தின் இரத்தம் சிந்தப்பட்ட மரமாகிய சிலுவையையே காண்பிக்கிறது

செங்கோன்மை என்பது செங்கோல் ஆளுகையைக் காண்பிக்கிறது அதாவது சிவந்த மரத்தின் ஆளுகையாகும். செங்கோன்மை திருக்குறளில் 55 வது அதிகாரம் ஆகும். அந்த அதிகாரம் முழுவதும் செங்கோலாகிய இரத்தம் சிந்தப் பட்ட சிலுவையின் ஆளுகையைப் பற்றித்தான் குறிப்பிடுகிறது

கோன்மை blood cross rule

kōṉmai s. (கோல்) ruling, governing, ஆளுகை. கௌ கௌசலம் , s. ability, திறமை; 2. artfulness, தந்திரம்.

செங்கோல் = செங் + கோல் ஆகும்

செங் என்பது இரத்தம் சிந்தப்பட்டதையே காண்பிக்கிறது

கோல் என்பது மரத்தால் ஆன ஒரு தடியாகும்

செங்கோல் என்பது தெய்வம் இரத்தம் சிந்தி மரித்த சிலுவையாகிய மரத்தையே காட்டுகிறது. அதையே நாம் காவு தடிஎன அழைக்கிறோம்.

செங்கோல் blood cross rule

செங்கோல் என்பது இரத்தம் சிந்தப்பட்ட மரம் ஆகும்

கோல் என்பது மரத்தால் ஆன தடி ஆகும்

கோல் என்ற வார்த்தை கம்பு ; மரக்கொம்பு ; ஊன்றுகோல் ; செங்கோல் ; அளவுகோல் ; எழுதுகோல் ; ஓவியந்தீட்டுங் கோல் ; முத்திரைக்கோல் ; தீக்கடைகோல் ; பிரம்பு என அழைக்கப்படுகிறது.

செங் என்ற வார்த்தை இரத்தத்தைக் குறிக்கிறது உதாரணமாக வீடு கட்ட பயன் படும் கல்லைச் செங்கல் என அழைக்கிறோம், செங்கல்லைச் சிவப்புக் கல் என அழைப்பது இல்லை. ஏன் என்றால் அந்தக் கல் இரத்த சிவப்பு நிறத்தில் இருப்பதால் அதற்குச் செங்கல் எனப் பெயர் வழங்கப்படுகிறது. அதே போல் தான் டெல்லியில் உள்ள செங்கோட்டை இரத்த சிவப்பு நிறத்தில் இருப்பதால் செங்கோட்டை என அழைக்கப்படுகிறது. செங்கோல் தெய்வம் இரத்தம் சிந்திய மரம் ஆகும். செங்கோல், செங்கோடு, என்ற வார்த்தைகள் இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி மரித்த சிலுவையையே குறிக்கும். தெய்வம் மரித்த அந்த செங்கோலை வைத்து செம்மையாக அரசாளுவது மன்னனுக்கு அழகு ஆகும். இதையே அவ்வையார் கோடு ஆயுதம் என எழுதுகிறார்.


செங்கோன்மை
Rule of the Blood

கோடு என்பது மரம் எனப் பொருள் படும், அவ்வையார் விநாயகர் அகவலில் பிள்ளை தெய்வத்தைப் பாடும் போது கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே" என்று பாடுகிறார். கோடு ஆயுதம் என்பது மரத்தால் ஆன கழுமரமே ஆகும். மரத்தால் ஆன சிலுவையிலே கொடுமையான வினை தீர்த்தவர் ஆகும்

குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள திருச்செங்கோடு என்ற பக்கத்தைப் பார்க்கவும். www.

 
 
 

コメント


bottom of page